search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை"

    ஒடிசா மாநிலம், ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் 12 லட்சம் ரூபாயை அள்ளிச் சென்றனர். #IOBATM #loot
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம், ஜகத்சிங்பூர் மாவட்டத்துக்குட்பட்ட முலிசிங் கிராமத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்றுள்ளது.

    நேற்று பின்னிரவு இந்த மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த 12 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். #IOBATM #loot 
    ×